தன்+திரத்தை சமூக கோட்பாடுகளின் படி தீய விஷயங்களுக்கு உபயோக படுத்துவது கருப்பு தந்திரம் எனப்படும். இதில் சூன்யம், வைப்பு, ஏவல், வசியம் என்பது சொல் வழக்கில் இருப்பது. ஆனால் அதுவே அட்டகர்மம் எனப்படும் எட்டு செய்ல்கள்:
1. தம்பனம்: ஒருவன் நிலை மேற்கொண்டு வளராமல் கட்டி வைப்பது, இது குறிப்பிட்ட திதி, வார நட்சந்திரங்களில், பூர்வ பட்ச இரவில் வடக்கு நோக்கி செய்வது.
2. வசியம்: ஒருவரை தன் வசப்படுத்திக் கொள்வது, கனவனை மனைவியும், மனைவியை கணவனும் தன் தேவைக்கேற்ப்ப செய்வது. இது பூர்வ பட்ச பகலில் கிழக்கு நோக்கி செய்வது.
3. உச்சாடனம்: ஒருவனை பைத்தியம் பிடிக்க செய்வது அல்லது தன்னிலை மறக்க செய்வது. அமர பட்ச பகலில், மேற்கு நோக்கி செய்வது.
4. மோகனம்: தன்னை நோக்கிய அளவில் ஒருவர் தன்வசமிழந்து மோகிக்க (பாலுறவுக்காக) வைப்பது. பூர்வ பட்ச இரவில் வடக்கு நோக்கி செய்வது.
5. பேதனம்: தனக்கு வேண்டாத இருவருக்கு பகைமையை உருவாக்கி சண்டை இட வைப்பது. அமரபட்ச இரவில் தெற்கு நோக்கி செய்வது.
6. ஆக்ருஷணம்: அனைவரையும் தன் வசப்படுத்திக் கொள்வது. பூர்வ பட்ச் பகலில் கிழக்கு நோக்கி செய்வது.
7. வித்வேஷணம்: பகைவர் பலரை தன்முன்னே அடித்து சேதப்படுத்துவது. அமர பட்ச இரவில், மேற்கு நோக்கி செய்வது.
8. மராணம்: தனக்கு வேண்டாத ஒருவரின் உயிரை பறிப்பது. அமர பட்சம் இரவில் தெற்கு நோக்கி செய்வது.
Filed under: கருப்பு தந்திரம், பஞ்ச பட்சி | Leave a comment »